கோவை பஸ் நிலையத்தில் கை, கால்கள் கட்டி ஆண் படுகொலை: அழுகிய நிலையில் உடல் மீட்பு

கோவை: கோவை போத்தனூரை அடுத்த வெள்ளலூர் பகுதியில் பஸ் நிலையம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை பொதுமக்கள் வழக்கம் போல பஸ் நிலைய பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது, பஸ் நிலைய கட்டிடத்தின் மறைவான பகுதியில் அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆணின் சடலம் அருகே இருந்த தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து கொலை செய்யப்பட்ட ஆண் யார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்?, பஸ் நிலையம் பகுதியில் தூக்கி வீசி சென்றார்களா? அல்லது பஸ் நிலையம் பகுதிக்கு அழைத்து வந்து கை, கால்களை கட்டி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post கோவை பஸ் நிலையத்தில் கை, கால்கள் கட்டி ஆண் படுகொலை: அழுகிய நிலையில் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: