இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் உள்ள குண்டூர் கால்வாய் அருகே 30 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்தார். விசாரணையில், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தில் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளோம்.
இறந்த பெண்ணின் உடல் அருகே ஆணுறை பொட்டலங்கள் மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பெண்ணின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் விவரங்களைச் சேகரிக்க உள்ளோம். இறந்த பெண் யார்? எங்கிருந்து வந்தார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? பாலியல் பலாத்கார தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.
The post பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் குத்திக்கொலை: கொடூர ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.