பட்டாக்கத்தி காட்டி மிரட்டிய ரவுடி கைது

* தப்பியோடிய மற்றொருவருக்கு வலை

தவளக்குப்பம் : புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகர் மாதா கோயில் வீதியில் நேற்று முன்தினம் ஒருவர் அவ்வழியே சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறியில் ஈடுபட முயன்றுள்ளார்.

தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பியோடியவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர், அரியாங்குப்பம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த செல்வவீரன் (எ) வெடிகுண்டு வீரா (20) என்பதும், அவர் மீது கஞ்சா, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 அடி நீளமுள்ள பட்டாக்கத்தி மற்றும் ஒரு செல்போனை கைப்பற்றினர்.பின்னர் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதேபோல் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய மற்றொரு நபரை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பட்டாக்கத்தி காட்டி மிரட்டிய ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: