மத கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு பாஜ தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு

சேலம்: மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜ தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தமானது, அங்கிருக்கும் தர்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றம் 1931ம் ஆண்டு தீர்ப்பு கூறி இருக்கிறது என மத கலவரத்தை தூண்டும் வகையில் அண்ணாமலையும், எச்.ராஜாவும் பேசியுள்ளனர்.

மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு இவ்வாறு பொய் தகவலை பரப்பி வருகின்றனர் என கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, நேற்று மாநகர சைபர் கிரைம் போலீசார், அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பியூஸ் கூறுகையில், தமிழ்நாட்டில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் தொடர்ந்து பொய்யான தகவல்களையே பரப்பி வருகின்றனர். எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post மத கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு பாஜ தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: