ராயக்கோட்டை பகுதியில் பூத்து குலுங்கும் ஆஸ்டல் பூச்செடிகள்

ராயக்கோட்டை : ராயக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாய சாகுபடிக்கான இதமான சூழ்நிலை நிலவுவதால், விவசாயிகள் அதிகளவில் மலர் செடிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன்படி, ராயக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியான தொட்டதிம்மனஅள்ளி, உல்லட்டி, நெல்லூர் ஆகிய கிராமங்களில் ஆஸ்டல் பூச்செடிகள் சாகுடிபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சொட்டுநீர் பாசனத்தில் வளரும் ஆஸ்டல் பூ விளைச்சலுக்கு, சாகுபடி செலவு குறைவு என விவசாயிகள் கூறுகின்றனர். பூ நன்கு வளர்ச்சியடைந்து மலர்ந்தவுடன், அதை பறித்து விற்பனைக்கு மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். கிலோ ரூ.80க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ராயக்கோட்டை பகுதியில் பூத்து குலுங்கும் ஆஸ்டல் பூச்செடிகள் appeared first on Dinakaran.

Related Stories: