பின்னர் சவுமியா சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு, பொது சுகாதாரத் துறையில் முன்னேறி இருக்கிறது. சுகாதார துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தனியாரை விட பொது சுகாதாரத் துறை சிறப்பாக உள்ளது. கேன்சர் அதிகரிக்க வாழ்வியல் முறைகள்தான் காரணம். உணவு பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது. நல்ல காய்கறிகள், சத்தான பழங்களை நாம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் தவிர்ப்பதற்கு எச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக 14 வயதுடைய பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி போட உள்ளதாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது மிகவும் சிறப்பான ஒரு அறிவிப்பு, சிறந்த முன்னெடுப்பும் கூட. இரண்டு தடுப்பூசிகள் மிக முக்கியமானது. ஒன்று எச்பிவி, இது நோய் தடுப்புக்கானது. மற்றொன்று ஹெப்படைடிஸ் பி, இது கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post இளம் பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி: தமிழ்நாடு அரசுக்கு சவுமியா சுவாமிநாதன் பாராட்டு appeared first on Dinakaran.