லால்குடி, மார்ச் 15: புள்ளம்பாடியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண்மை கள ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கினர். பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம் வேளாண் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கிராம புற விவசாய அனுபவ களப்பணி தொடக்க விழா புள்ளம்பாடி வேளான்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குனர் பிரகாஷ், வேளாண் அலுவலர் கௌதம் மற்றும் வேளாண் அலுவலர்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் சாகுபடி தொழில்நுட்பத்தை பற்றிய கையேடுகள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
The post புள்ளம்பாடியில் ஊரக வேளாண்மை பணி தொடக்க விழா appeared first on Dinakaran.