திருச்சி, மார்ச் 12: திருச்சியில் ஜூஸ் அருந்திவிட்டு, அதற்கான பணத்தை கொடுக்காமல் மேலும் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோவில் காலனி தெருவை சேர்ந்தவர் கவியரசு (21). இவர் திருச்சி மஞ்சீவி நகர் மெயின் ரோட்டில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.
மார்ச் 10ம் தேதி இவர் கடைக்கு வந்த, பூசாரித்தெரு முனிசிபல் காலனியை சேர்ந்த மணிமாறன் (29), ஓடத்துறை காவிரி பாலம் பகுதியை சேர்ந்த விஜய் (27) மற்றும் திருவானைக்காவல் கோவில் தோப்பு பகுதி சஞ்சய் (23) ஆகிய 3 பேரும் ஜூஸ் அருந்தியுள்ளனர். கவியரசு ஜூஸ்க்கு உரிய பணத்தை கேட்டார். அவர்கள் பணம் தர மறுத்ததுடன், கத்தி முனையில் கவியரசை மிரட்டி ரூ.2 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post ஜூஸ் கடைக்காரரை பணம் கேட்டு மிரட்டிய 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.