சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

தாம்பரம், அக். 24: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் மாருதி நகர் பிரதான சாலையில் உள்ள தாம்பரம் மற்றும் சேலையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சென்னை சிட்டி 3 லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் 2 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 பேர் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சேலையூர் சார் பதிவாளர் அசோக்குமாரிடம் ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையின்போது அலுவலக வளாகத்தில் இருந்த ஒருவரிடம் இருந்து கணக்கில் வராத ₹40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் பற்றியும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றியும் விசாரிக்கின்றனர்.

The post சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: