எனவே இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து கவனமாக இருக்க தமிழ்நாடு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண்டிகை கால ஷாப்பிங்கை குறிவைத்து தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பதாக கவர்ச்சியான லாபகரமாகத் தோன்றும் விளம்பரங்களை மோசடி நபர்கள் வடிவமைக்கின்றனர். மக்கள் வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது செல்போன் அழைப்பு மூலமாகவோ மோசடி நபர்கள் தொடர்பு கொள்கின்றனர். அவ்வாறு தொடர்பு கொள்ளும் பொழுது www.kannancrackers.in மற்றும் www.sunrisecrackers.com போன்ற போலி இணையதளங்களில் பட்டாசுகளை வாங்க அறிவுறுத்துகின்றனர்.
இந்த இணையதளங்கள் வெளித்தோற்றத்தில் காண்பதற்கு உண்மையானது போல் தோன்றினாலும், இவை பணத்தை திருடுவதற்கான வடிவமைக்கப்பட்டவை ஆகும். இவை பெரும்பாலும் உண்மையான தோற்றமுடைய தயாரிப்பு பட்டியல்கள் விலைகள் மற்றும் பணம் செலுத்தும் விருப்பங்களை காண்பிக்கும். பணம் செலுத்தும் பொழுது சில கூடுதல் தள்ளுபடிகளும் சேர்த்து காண்பிக்கப்படும். ஆனால் பணம் செலுத்தியவுடன், ஆர்டர் செய்த பொருட்கள் நம்மை வந்து சேரும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. இவ்வாறான இணையதளங்களை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிடுகின்றனர். மேலும், இந்த வலைத்தளங்களிலுள்ள தங்கள் தகவல்களை நீக்கிவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பணத்தை பறிகொடுக்க நேரிடுகிறது.
The post ஆன்லைன் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை மோசடி: பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.