காவல் ஆணையரகத்தில் குறைதீர் முகாமில் 36 மனுக்கள்

சென்னை, அக். 24: சென்னை காவல் ஆணையரகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களின் 36 மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடந்து வரும் பொதுமக்கள் குறைதீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் நேற்று காவல் ஆணையரகத்தில் 36 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது, காவல் இணை ஆணையர் (தலைமையிடம்) கயல்விழி உடனிருந்தார்.

The post காவல் ஆணையரகத்தில் குறைதீர் முகாமில் 36 மனுக்கள் appeared first on Dinakaran.

Related Stories: