அப்போது எருக்கஞ்செரி நெடுஞ்சாலை சாஸ்திரி நகர் பகுதி அருகே வந்தபோது வினோத்குமார் காரை நிறுத்திவிட்டு இதற்கு மேல் வண்டி செல்லாது, நீங்கள் கூறிய இடம் வந்துவிட்டது என கூறியுள்ளார். அப்போது, காரில் இருந்த இருவரும் கீழே இறங்கி வினோத் குமாரை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த 2700 ரூபாய் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டனர். வினோத்குமார் அவரது காலில் விழுந்து அழுது செல்போன் இல்லை என்றால் என்னால் வேலை செய்ய முடியாது என கெஞ்சியுள்ளார். உடனே அவர்கள் செல்போனை மட்டும் கொடுத்துவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர். அதன் பிறகு வினோத்குமார் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 பேரை தேடி வருகின்றனர்.
The post நள்ளிரவில் சவாரிக்கு சென்றபோது ரேபிடோ கார் டிரைவரை தாக்கி பணம் பறிப்பு appeared first on Dinakaran.