இந்நிலையில், செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம், ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதிகளுக்குச் செல்ல நேற்று அதிகாலை பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது, தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்றவுடன் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறியவர்கள் இருக்கைகளை பிடித்து அமர்ந்தனர். இதனால் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் சிலர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்று மினி லாரி ஒன்றை வாடகைக்கு ஏற்பாடு செய்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். அப்போது, பஸ் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளிடம் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றும், ஜனநாயக கடமையாற்ற வாக்களிக்க செல்கிறோம் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
The post ஜனநாயக கடமையாற்ற ஆர்வம் மினி லாரியை வாடகைக்கு பிடித்து சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் appeared first on Dinakaran.