அதேபோல வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டி உடன் கோடை மழை கொட்டியது. கடந்த 35 நாட்களாக வேலூரில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று வேலூரில் அதிகபட்சமாக 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இந்நிலையில், வேலூர் சுற்றுவட்டார பகுதியில் குடியாத்தம், பேனாம்பட்டு உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால் குடியாத்தம் பகுதியில் வெப்பம் தணிந்து குளிச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post கொளுத்தும் வெயிலுக்கு இடையே மழை: ஏற்காடு மற்றும் குடியாத்தம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி..! appeared first on Dinakaran.