திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தரிசனம்

திருவண்ணாமலை: நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா. இவர் இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். முதலில் அண்ணாமலையார் சன்னதி, பின்னர் உண்ணாமுலையம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். தொடர்ந்து நவகிரக சன்னதியை வலம் வந்து வழிபட்டார். இதையடுத்து கோயில் சார்பில், சவுந்தர்யாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக வெளியே சென்ற அவர், காரிலேயே கிரிவலம் சென்றார். அவருடன் திரைப்பட இயக்குனர் முருகன் உடனிருந்தார்.

சவுந்தர்யா ஏற்கனவே அவரது தந்தை ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கியுள்ளார். தற்போது புதிய படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தீவிர சிவ பக்தரான சவுந்தர்யா புதிய படம் துவங்கும் முன்பு அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி புதிதாக இயக்க படம் சிறப்பாக அமைய வேண்டி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

The post திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: