கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணி நடந்து வருகிறது. வழக்கத்தை விட கடந்த ஒரு மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேதாரண்யத்திலும் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்காக இரவு, அதிகாலை நேரங்களில் தொழிலாளர்கள் உப்பு உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post பகலில் வெயில் கொளுத்துகிறது; வேதாரண்யத்தில் அதிகாலை, இரவு நேரங்களில் உப்பு உற்பத்தி பணி appeared first on Dinakaran.