- எம்.கே.
- ஸ்டாலின்
- Jawahirullah
- சென்னை
- மனிதநேய மக்கள் கட்சி
- பாபநாசம்
- சட்டமன்ற உறுப்பினர்
- எம்எம்ஏ
- சட்டப்பேரவை
- முத்துவேல் கருணாநிதி
சென்னை: சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா (மமக) பேசியதாவது: கல்வியில் மட்டும் 9 திட்டங்கள். இந்தச் சாதனைகள் ஒரு காலக்கட்டத்தில் நிச்சயமாகப் பேசப்படும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சிக் காலத்தை ‘கல்வி புரட்சிக் காலம்’ என்று வர்ணிக்க விரும்புகின்றேன்.
சமூக நீதியைத் தகர்க்கக்கூடிய பல சதித் திட்டங்களையெல்லாம் முறியடித்திருக்கின்றார். வெறுப்பு அரசியலால் பாதிக்கப்படக்கூடிய, சிறுபான்மைச் சமுதாயத்தின் பிரதிநிதியாக நான் சொல்கிறேன். தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே தலைமை தாங்கும் வல்லமை வாய்ந்த தலைவராக, நம்முடைய முதல்வர் விளங்குகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
