- பிரியங்கா காந்தி
- அசாம்
- முதல் அமைச்சர்
- காங்கிரஸ்
- பொதுச்செயலர்
- ஜூபின் கார்க்
- சோனாபூர், குவஹாத்தி
- ஜூபின்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று அசாம் வருகை தந்திருந்தார். கவுஹாத்தியின் சோனாபூரில் உள்ள பாடகர் ஜூபின் கர்க் நினைவிடத்திற்கு சென்று பிரியங்கா காந்தி அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், ‘‘பாடகர் ஜூபின் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் அன்பின் செய்தியைப் பரப்பினார். அரசியலில் இரண்டு வகையான தலைவர்கள் உள்ளனர். ஒருவர் நேர்மறையான அரசியல் செய்பவர். மற்றொருவர் இருவேறுபட்ட கொள்கை நிலைபாடுகளை நோக்கி பிரிந்து செல்பவர். கவுரவ் கோகாய் நேர்மையான நபர்.
அரசியலில் நேர்மறையை கொண்டு வர விரும்புகிறார். அதனால் தான் அவர் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கின்றன. கவுரவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது என்று கூறி தாக்குதல் நடத்துவது தப்பான அரசியல். ஒரு அரசியல் தலைவரின் குடும்பத்தையும், குழந்தைகளையும யாரும் தாக்கக்கூடாது. இதுபோன்ற அரசியலக்கு பதிலாக அசாம் முதல்வர் சர்மா வேலை தேடும் மாநில இளைஞர்கள் மற்றும் பெண்கள் பற்றிப் பேசவேண்டும்’’ என்றார்.
