- புதுக்கோட்டை மாவட்டம்
- தவேகா மாவட்டம்
- பர்வேஸ்
- புதுக்கோட்டை மாநகராட்சி
- பொதுச்செயலர்
- புதுக்கோட்டை ஆனந்த்
- ஹபர் கான்
- Manamelkudi
- யூனியன்
- சீலன்
புதுக்கோட்டை மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் பர்வேஸ். இவர் புதுக்கோட்டை மாநகராட்சி கவுன்சிலர். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு மிகவும் நெருக்கமானவர். தற்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி ஒன்றிய செயலாளராக இருந்த ஹாபர்கான் என்பவரை நீக்கிவிட்டு, சீலன் என்பவரது மனைவியை ஒன்றிய செயலாளராக பர்வேஸ் நியமித்துள்ளார்.
இந்நிலையில் கட்சியின் புதிய பொறுப்பாளர் நியமனத்திற்கு மாவட்ட செயலாளர் பர்வேஸ் பணம் பெற்றுக்கொண்டு நியமித்துள்ளார் என்று 2 பேர் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ விவரம் வருமாறு:
ஒருவர்: தம்பி ஹாபர்கானா.
மற்றொருவர்: ஆமா.
ஒருவர்: ஒன்றிய செயலாளராக இருந்தீங்க உங்களை நீக்கியாச்சி.
மற்றொருவர்: ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்துவிட்டேன். எனக்கு எதுவுமே சொல்லல. எந்த வேலையும் செய்யவேணாம். சரி. எதுனாலன்னு தெரியல
ஒருவர்: ஒன்றிய செயலாளருக்கு பணம் வாங்குனாங்களா.
மற்றொருவர்: ஆமா வாங்கினாங்க. நான் வக்கீலா இருக்கேன். எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு புள்ளை இருக்கு. எனக்கு வயசு 38க்கு மேல. நான் பர்வேஸைவிட வயசு கூட. அவரை தலைவருன்னா கூப்புடனுமாம். உங்களை தலைவரேன்னு சொன்னா தளபதியை எப்டி கூப்புடுறது. என்னட்ட வாங்குன காச எடுத்து வைய்யுங்க என வாக்குவாதம் ஆச்சு. வாக்குவாதம் நடந்து ஒரு வாரம் கழிச்சு என்னை பதவியை விட்டு தூக்குனார்.
ஒருவர்: பணம் கேஷா கையில கொடுத்தீங்களா. இல்லை அக்கவுண்டல அனுப்பினீங்களா.
மற்றொருவர்: கையில் தான் கேஷா கொடுத்தேன். இவ்வாறு அதில் இருந்தது. இது குறித்து மாவட்ட செயலாளர் பர்வேஸ் கூறுகையில், ‘இந்த ஆடியோ பொய்யானது. ஹாபர்கான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்தவர். அவர் தவறான செயல்களில் ஈடுபட்டதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் தவறான தகவலை பரப்புவதால் அறந்தாங்கி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
