×

கோவில்பட்டியில் வைகோ போட்டி? துரை வைகோ சஸ்பென்ஸ்

தூத்துக்குடியில் துரை வைகோ எம்.பி நேற்று அளித்த பேட்டி: தச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக இணைந்தது வரவேற்கத்தக்கது. சமூக நீதி அரசியலா- சமூகத்திற்கு எதிரான அரசியலா?, ஜனநாயக சக்தியா- சர்வாதிகார சக்தியா? இந்த இரண்டுக்கும் இடையேயான போட்டி. திமுக வலுவான கூட்டணி. தமிழகத்திற்கு தேர்தல் காலங்களில் பிரதமர் அடிக்கடி வரத்தான் செய்வார்.

தமிழகத்தில் பாஜ சார்பாக நான்கரை ஆண்டுகளில் எந்த முக்கிய திட்டம் அறிவித்தார்கள்? தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை கொடுத்தார்களா? மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு செயல்படுகிறது. நடிகர் விஜய் மிகப்பெரிய ஒரு நட்சத்திரம். தமிழ்நாட்டில் அவரை ரசிப்பதற்கு ஒரு இளைஞர்கள் கூட்டம் உள்ளது. பாஜவை மதவாத சக்தி என்று அவர் எதிர்க்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி, திட்டத்திற்கு உண்டான நிதியை ஒன்றிய அரசு தரவில்லை. எஸ்ஐஆர், சிறுபான்மையின தாக்குதல் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து விஜய் பேச மறுக்கிறார். ஆகவே அது ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. தேர்தல் நேரத்தில் 15 விழுக்காடு வரைக்கும் விஜய்க்கு வாக்குகள் வரலாம். ஆனால் அது வெற்றியாக மாறாது. விஜய்யால் வாக்குகள் பிளவுபடும் போது அது திமுக வெற்றியை எளிதாக்கும்.

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு எத்தனை சீட் என்பது குறித்து தலைமையும், தலைவர் வைகோவும் முடிவு எடுப்பர். தொடர்ந்து அன் கண்டிஷனல் சப்போர்ட் தான் கொடுத்து இருக்கின்றோம். நாங்கள் திமுக கூட்டணியில் நீடிப்போம். மிகப்பெரிய வெற்றி அடைவோம். ராஜ்யசபா எம்பி சீட் குறித்து முன்னணி தலைவர்கள் பேசி முடிவு எடுப்பர். கோவில்பட்டி தொகுதியில் தலைவர் வைகோ போட்டியிட விரும்பினால் அவர் கூட்டணியில் மூத்த தலைவரிடம் பேசுவார். இவ்வாறு கூறினார்.

Tags : Vaiko ,Kovilpatti ,Durai Vaiko ,Thoothukudi ,DMDK ,DMK ,
× RELATED தேமுதிகவின் `வி’ சென்டிமென்ட்