×

நச்னு நாலு கேள்வி: பாஜவுடன் கூட்டணியால் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்குமா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

1. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்று சொன்னாலும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, தொகுதி பங்கீட்டில் பாஜ கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறதே? இந்தியாவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை பாரதிய ஜனதா கட்சி. தமிழ்நாட்டிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை அதிமுக எடப்பாடி பழனிசாமி. இதை ஒன்றிய உள்துறை அமைச்சரே சொல்லி இருக்கிறார். கூட்டணி பேச்சுவார்த்தையில் எல்லோரும் பங்கு பெறுவது என்பது புதிது அல்ல. கூட்டணியில் இருப்பவர்கள், கூட்டணி பற்றியும், அதை வலிமைப்படுத்தி வெற்றி பாதையில் அழைத்து செல்வது குறித்தும் பேசுவது என்பது புதிது அல்ல, எல்லோரும் பங்காற்றுவார்கள்.

2. அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் விமர்சிக்கிறார்? ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதாவை உரிமை கொண்டாடுகிறாரே? முரண்பட்ட கருத்தாக உள்ளதால் மக்கள் மத்தியில் இது எடுபடாது. முரண்பட்ட கருத்தாக இருப்பதால் முன்மாதிரியாக சொல்லுவதும், அதை முரண்பட்டு கருத்து சொல்வதால், அவருக்கு தெளிவான பாதை இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

3. பாஜவுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் ஓட்டுகள் கடந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இதனால், தோல்வியடைந்தோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூறியிருந்தனர். தற்போது மீண்டும் பாஜவுடன் கூட்டணி வைத்து உள்ளீர்களே? இதனால் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்குமா? சிறுபான்மையினர் ஓட்டுகள் கடந்த தேர்தலில் கிடைக்கவில்லை என்பது தவறானது. தவறான பிரசாரத்தால் வாக்குகளில் வித்தியாசங்கள் ஏற்படலாம். உண்மையான பிரசாரத்தின் மூலமாக வெற்றி எடுக்க வேண்டும்.

4. 2026 தேர்தலில் அதிமுகவுக்கான களம் எப்படி இருக்கும்? எவ்வளவு தொகுதிகளில் அதிமுக வெல்லும்?
234 வெல்வது லட்சியம். 210 வெல்வது நிச்சயம்.

Tags : Nachnu Nalu ,BJP ,AIADMK ,former ,minister ,R.P. Udayakumar ,National Democratic Alliance ,National Democratic Alliance for India ,Bharatiya Janata Party ,National Democratic… ,
× RELATED தேமுதிகவின் `வி’ சென்டிமென்ட்