×

திமுக 7வது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் அமரும்: கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமச்சந்திரன் உறுதி

சென்னை: சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன் பேசியதாவது; ஒன்றிய ஆட்சியாளர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆர்சி போன்ற சட்டங்களை ஒரு மதத்திற்கு எதிராக கொண்டுவந்தபோது, அந்தச் சட்டங்களுக்கு எதிராகவும் 4 வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராகவும் இந்த மாமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டினுடைய தொகுதி எண்ணிக்கையை குறைத்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு குரலை நிறுத்த பார்த்தபோது, அதற்கான தீர்மானத்தையும் இந்த மாமன்றத்திலே நிறைவேற்றியிருக்கிறோம். தமிழ்நாடு பொருளாதாரத்தில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் 7வது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் அமரும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK ,Tamil Nadu ,Communist ,Ramachandran ,Chennai ,Assembly ,Union ,
× RELATED தகுதிச்சான்று கட்டண உயர்வை அரசு...