×

சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: 16வது சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது என்று பேரவையில் சபாநாயகர் அப்பாவு கூறினார். 16வது சட்டப்பேரவை கூட்டத்தில் கடைசி நாளான நேற்று சபாநாயகர் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசியதாவது: சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 2021ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி தொடங்கி நேற்று வரை மொத்தம் 161 நாட்கள் நடைபெற்றுள்ளன.

அவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை 4 மணி 11 நிமிடங்கள் நீடித்தது. முதல் முறையாக சட்டமன்ற நிகழ்வுகள் 2022ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. அமைச்சர் துரைமுருகனை சமீபத்தில் மருத்துவமனையில் சென்று பார்த்தபோது, நான் சொன்னதாக அவையில் ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சட்டமன்றம் அமைதியாக நடைபெறுகின்றதா, முதல்வர் நன்றாக இருக்கிறார்களா, நான் சட்டமன்றத்தில் பேசிய வார்த்தைகளால், யாராவது மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று நான் சொன்னதாக சட்டமன்றத்தில் பதிவு செய்துவிடு என்று கூறினார். அவர் சொன்னதை கேட்டு என் கண்கள் கலங்கி விட்டது என்று சபாநாயகர் பேசினார். முதல்வருடன் புகைப்படம்: பேரவை கூட்டத் தொடர் முடிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்களை கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Tags : Chennai ,16th Assembly ,Speaker ,Appavu ,
× RELATED தகுதிச்சான்று கட்டண உயர்வை அரசு...