×

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பேரவையில் உறுதி மொழியேற்பு

சென்னை: உலக தாய்மொழி தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் தாய்மொழி தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தமிழக சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால நிதி நிலை அறிக்கை மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர்கள் பதில் உரை அளித்தனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி (இன்று) உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று, சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேற்று காலை 11 மணிக்கு உலக தாய்மொழி தினத்திற்கான உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சட்டப்பேரவையிலும் நேற்று காலை 11 மணிக்கு உலக தாய்மொழி தினம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சபாநாயகர் அப்பாவு உறுதிமொழியை படிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் உறுதி மொழியை திரும்ப சொல்லி உறுதியேற்றுக்கொண்டனர்.

Tags : International Mother Language Day ,Chennai ,Mother Language Day ,Tamil Nadu Assembly ,
× RELATED தகுதிச்சான்று கட்டண உயர்வை அரசு...