டெல்லி: வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது அதன்படி; காலை 8 மணிக்கு முன்னாலும் இரவு 7 மணிக்கு பின்னாலும் கடனை திரும்பக் கேட்டு வாடிக்கையாளருக்கு கால் செய்ய கூடாது. கடன் பெற்றவரை தவிர அவர் வீட்டினர் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது. வாடிக்கையாளர் எங்கே வரச் சொல்கிறாரோ அங்குதான் அவரை சந்திக்க வேண்டும்
கவுரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிரட்டலோ தவறான வார்த்தைகலோ பயன்படுத்தப்படவே கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்பிஐ தகவல் தெரிவித்துள்ளது.
