புதுடெல்லி: கடந்த 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தநிலையில், ஸ்டார்ட் அப் இந்தியா நிதி 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 கோடி நிதியிலான இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரதமரின் புதிய அலுவலகமான சேவா தீர்த்தத்தில் தனது முதல் நாளில், ஏழைகள், விவசாயிகள், பெண்கள் ஆகியோரின் அதிகாரமளிப்புக்கான கோப்புகளில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இதில், ரூ..10,000 கோடி பங்களிப்புடன் கூடிய ஸ்டார்ட் அப் இந்தியா நிதி 2.0 திட்டத்திற்கும் அவர் ஒப்புதல் அளித்தார்.
