காங்கிரசில் இருந்து பா.ஜவில் இணைந்த பஞ்சாப் மாஜி முதல்வருக்கு சம்மன் அனுப்பிய அதிகாரிக்கு இடமாற்றம்: சென்னை ஈடி அலுவலகத்திற்கு டிரான்ஸ்பர்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர்சிங். அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்றியதால், தற்போது பா.ஜவில் இணைந்துள்ளார். அவர் மீது சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு உள்ளது. மேலும் வெளிநாட்டில் சொத்து குவித்த வழக்கும் உள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி கேப்டன் அமரீந்தர்சிங், அவரது மகன் ரனீந்தர்சிங் ஆகியோருக்கு ஜலந்தர் மண்டல அமலாக்கத்துறை அலுவலக கூடுதல் இயக்குனர் ரவி திவாரி சம்மன் அனுப்பி இருந்தார்.

இந்த வழக்கில் அமரீந்தர்சிங் மற்றும் அவரது மகன் ரனீந்தர்சிங் ஆகியோர் ஆஜராகவில்லை. 83 வயதான அமரீந்தர்சிங் தற்போது முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேப்டன் அமரீந்தர்சிங்கிற்கு சம்மன் அனுப்பிய ஜலந்தர் மண்டல அமலாக்கத்துறை அலுவலக தலைவர் கூடுதல் இயக்குனர் ரவி திவாரி தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜலந்தர் அலுவலகத்தில் இருந்து சென்னை மண்டல அலுவலகத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இதுவழக்கமான நடைமுறைதான் என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

* அமலாக்கத்துறை கூடுதல் இயக்குநர் ரவி திவாரி 2009ஆம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரி ஆவார்.

* பஞ்சாப் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பல பணமோசடி மற்றும் ஹவாலா வழக்குகளை ஜலந்தர் மண்டல அமலாக்கத்துறை அலுவலகம் விசாரித்து வருகிறது.

* 2024-25 நிதியாண்டில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை உரிய காலத்தில் விசாரித்து தண்டனை பெற்றுக்கொடுத்ததற்காக 2025 மே மாதம் நடைபெற்ற வருடாந்திர அமலாக்கத்துறை தின நிகழ்வின் போது ஜலந்தர் மண்டல அலுவலகம் பரிசு பெற்றது.

Related Stories: