சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், ஒருங்கிணைப்பாளர் டி.எம்.மூர்த்தி தலைமையில் க.சந்தானம், வஹிதா நிஜாம், மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், எம்.செல்வராஜ், த.லெனின், சு.மோகன்குமார், பி.எஸ்.மாசிலாமணி, அ.பாஸ்கர் ஆகியோர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக அனைத்து துறை அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பொதுமக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பாலன் இல்லம், எண் 43/19, செவாலியர் சிவாஜி கணேசன் சாலை, தி.நகர், சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
