நெல்லை சட்டமன்ற தொகுதியில் அதிக அளவு தேவேந்திரகுல வேளாளர்கள் உள்ளனர். இதுதவிர பிள்ளைமார், யாதவர்கள், தேவர் சமூகத்தினரும் அதிகளவில் உள்ளனர். பேட்டை பகுதிகளில் இஸ்லாமியர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதியாக இருந்த நெல்லை சட்டசபை தொகுதி, 1967ம் ஆண்டு திமுகவின் புரட்சிக்கு பின்னர், திமுக பக்கம் சாய்ந்தது. அதன்பின்னர் அதிமுகவும், திமுகவும் இங்கு மாறி, மாறி வெற்றி பெற்று வருகின்றன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணியில் பாஜ சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
நெல்லை சட்டசபை தொகுதியில் தற்போது மீண்டும் அவரே போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் அதிருப்தி காரணமாக அவர் தொகுதி மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், நாங்குநேரி அல்லது சாத்தூர் தொகுதிகளை தேர்வு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது அப்ேபாதும் கூட நெல்லை தொகுதியின் செல்லப்பிள்ளை என தன்னை கூறி வரும் நயினார் நாகேந்திரன், அத்தொகுதியை பாஜ வசம் தக்க வைத்துக் கொள்ள விருப்பம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அப்படியெனில் அத்தொகுதியில் பாஜ சார்பில் அவரது மகன் நயினார் பாலாஜி, பாஜ மாவட்ட ெபாதுசெயலாளர் எம்.பி.நாகராஜன் உள்ளிட்டோரில் யாராவது ஒருவர் களமிறங்கக் கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நெல்லை சட்டமன்ற தொகுதியை இம்முறை நாங்கள் மீட்டே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் அதிமுக நிர்வாகிகளும், தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கட்சி தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, எம்ஜிஆர் மன்ற மாநில இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பால்கண்ணன், மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, அவை தலைவர் பரணி சங்கரலிங்கம் என பலர் ரேசில் உள்ளனர்.
இதில் சிலர் பாளை. தொகுதியையும் கேட்டு விண்ணப்பித்திருப்பதால், நெல்லை தொகுதியை விட பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய தீவிரம் காட்டும் புதிய தமிழகமும் கூட ஒரு பொது தொகுதி கட்டாயம் வேண்டும் என நிர்பந்தம் செய்கிறது. மானூர் வட்டாரத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் அதிகம் இருப்பதால், தங்களுக்கு நெல்லை சட்டசபை தொகுதியே வேண்டும் என கேட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைத்தால், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி களம் இறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வபெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார்நாகேந்திரன் (பாஜக தலைவர்) நெல்லை
பெ.சண்முகம் (சி.பி.எம். மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) டெல்லி
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்) டெல்லி
சீமான் (நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) பனையூர்.
* சசிகலா பற்றி கேள்வி செல்லூர் ராஜூ ஓட்டம்
அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டிற்கு மோடி, அமித்ஷா அடிக்கடி வருகிறார்கள். அதிமுகவிற்கு கூட்டணி கட்சிகள், மக்களின் ஆதரவு உள்ளது. மோடிஜி வருவார், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் போவார் எனச் சொல்லி இருக்கிறார்கள். அதுபற்றிய விபரங்களை பாஜ கட்சி தலைவரிடம் தான் கேட்க வேண்டும். பிரதமரின் அலுவலகத்தில் தான் கேட்க வேண்டும், மினிட் டூ மினிட் புரோக்ராம் மாறிக்கிட்டு இருக்கும். அவரு போறாரா? போகலயா? எங்கெங்கே போவாருன்னு தெரியாது’’ என்றார். அப்போது அவரிடம் நிருபர்கள், ‘‘சசிகலா புதிய கட்சி தொடங்குறாராமே?’’ என கேட்க, அடுத்த வினாடியே எழுந்து கொண்ட செல்லூர் ராஜூ ‘‘சரி வாங்க…’’ என்றபடி விறுவிறுவென்று கிளம்பி விட்டார்.
