ஜெயலலிதாகிட்டயே ஸ்வாகா போட்டவரு… இப்போ நடிகர் கட்சியில… அரசியல் கிசுகிசு; உஷாருய்யா… உஷாரு…

தவெக கட்சி சார்பில் விருப்ப மனு தாக்கல் நடந்து வருகிறது. இதுல வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில இரண்டு எழுத்து தவெக நிர்வாகி போட்டிட விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளாராம். இவர் ஏற்கனவே அதிமுகவில் 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். அப்போது அவர் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். வேலூர் நாடாளுமன்ற ெதாகுதியில் கண்டிப்பாக வெற்றிபெற்றுவிடுவார் என்று கட்சி தலைமை வரை நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையுடன் ஓயாது உழைத்த அதிமுக கட்சியினரின் கண்களில் மண்ணை தூவிட்டு தனது பணியை சிறப்பாக செய்து கொண்டார்.

அதாவது, அதிமுக கட்சி சார்பில் தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை செலவு செய்யாமலும், எதிர்த்து போட்டியிட்டவர்களிடமும் அடிபணிந்து விட்டார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கேற்ப அந்த தேர்தலில் அவர் தோல்வி தான் அடைந்தார். இது அப்போது அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் கட்சி தலைமைக்கு பறந்தது. இந்த தகவலை அறிந்த ஜெயலலிதா அவரை உடனடியாக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்கிவிட்டார். பின்னர் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார். அவரை அதிமுகவினர் மட்டுமின்றி மற்ற கட்சிக்கார்களும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஜெயலலிதா இறந்தபிறகு திடீரென சசிகலா ஆதரவாளராக மாறினார். அவ்வப்போது சசிகலாவை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மூலம் கடந்த மாதம் திடீரென தவெக கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவுக்கு தாவினார். இவர் தற்போது காட்பாடியில் தொகுதியில் போட்டியிட்டு ஒரு பெரிய தொகைக்கு அடிபோடும் தீவிர பணியில் களம் இறங்கி உள்ளராம். அதற்கேற்ப காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளதோடு சுவர் விளம்பரமும் செய்துள்ளாராம். அதிமுகவில் இருந்தபோது எப்படி பணத்தை அடித்துவிட்டு செட்டில் ஆகிவிட்டோரோ அதை தான் இப்போதும் செய்ய திட்டமிட்டு தீவிரமா களம் இறங்கி விட்டாராம். காட்பாடி தொகுதியில போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவது போல் செயல்பட்டு, கடைசியில் கரன்சி வாங்கிவிட்டு அமைதியாக இருந்துவிடலாம்ன்னு திட்டமிட்டு இருக்கிறாராம். அதேபோல் தவெக கட்சி தலைமை ஏதாவது ஒரு தொகை கொடுத்தாலும் அதையும் வாங்கிக் கொண்டு சத்தம் இல்லாமல் அமைதி வழியை தேர்வு செய்ய உள்ளதாக பொதுமக்கள் மத்தியிலும், கட்சிக்கார்கள் மத்தியிலும் பரபரப்பா பேசி வருகின்றனர். உஷாருய்யா… உஷாருன்னு வேலூர் மாவட்டத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

Related Stories: