நடிகர் ரவி மோகனுக்கு மாமியார் நோட்டீஸ்

சென்னை: தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என வலியுறுத்தி மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு ரவி மோகன் நேற்று முன்தினம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் சுஜாதா விஜயகுமார் தன் வக்கீல் மூலம் நேற்று ஒரு நோட்டீஸை ரவி மோகன் மற்றும் மீடியாவுக்கு வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது, ஆர்த்தி ரவியின் திருமண விவகாரம் குறித்து மீடியாக்கள் விவாதிக்கக் கூடாது.

ரவி மோகன், ஆர்த்தி திருமண பிரச்சனை குறித்து மோசமாக வெளியிடப்பட்ட அனைத்து விஷயங்களையும் ஆன்லைன் போர்டல்கள் மற்றும் இணையதளங்கள் நீக்க வேண்டும். ரவி மோகனும் தன் மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு எதிராக எதுவும் தெரிவிக்க நீதிமன்றம் தடைவிதிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தவர்கள் தனக்கு (ரவி மோகனுக்கு) என்ன செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் நாம் அப்படி நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் நமக்கு செய்யக் கூடாது என நினைக்கும் விஷயத்தை நாமும் அடுத்தவர்களுக்கு செய்யக் கூடாது என சுஜாதாவின் வக்கீல் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: