மோகன்லால் வெளியிட் டுள்ள மற்றொரு பதிவில், `போதை பொருளுக்கு எதிரான போராட்டங்களில் ஒரு ஹீரோவாக நாம் இருப்போம். அதை யாரும் பயன்படுத்த மாட்டோம். அன்புக்குரியவர்களும் அதை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்போம். போதை பொருளுக்கு ‘நோ’ என்று சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். பலாப்பழத்தில் ஓவியம்: மோகன்லாலின் ரசிகரும், கேரளாவை சேர்ந்த பிரபல ஓவியருமான டாவின்சி சுரேஷ், மோகன்லாலின் பிறந்தநாள் பரிசாக அவரது உருவத்தை பலாப்பழத்தின் மூலம் வரைந்துள்ளார். 20 வகையான பலாப்பழங்களில் இருந்து பழம், காய், விதை, தோல், இலைகள் ஆகிய 65 வகையான பாகங்களை வைத்து இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். அபூர்வமாக விளையும் சிவப்பு நிற பலாப்பழத்தை பார்த்தபோது மோகன்லாலுடைய ஓவியத்தை வரையும் ஐடியா ஏற்பட்டதாக டாவின்சி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மோகன்லால் சுயசரிதை டிசம்பரில் வெளியாகிறது: 65வது பிறந்தநாளில் அறிவிப்பு
