மோகன்லால் சுயசரிதை டிசம்பரில் வெளியாகிறது: 65வது பிறந்தநாளில் அறிவிப்பு

சென்னை: மலையாள திரையுலகின் மெகா ஸ்டார்களில் ஒருவர், மோகன்லால். நேற்று அவரது 65வது பிறந்தநாள். அவர் நடித்த ‘எல் 2: எம்புரான்’, ‘துடரும்’ ஆகிய படங்கள் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. நேற்று மோகன்லால் வெளியிட்ட ஒரு வீடியோவில், ‘எனது பிறந்தநாள் அன்று ஏற்பட்டுள்ள சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பானு பிரகாஷ் எழுதிய என் வாழ்க்கை பற்றிய கதை, ‘முகரகம்’ (Mukharagam) என்ற தலைப்பில் புத்தக மாக வெளியாகிறது. என் மதிப்புக்குரிய எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் முன்னுரை எழுதியுள்ளார். இப்புத்தகம் என் 47 வருட திரையுலக வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியது. என் வாழ்க்கை சம்பவங்களை வார்த்தைகளாக மாற்றி எழுதி மொழிபெயர்க்க பானு பிரகாஷ் மேற்கொண்ட முயற்சி பெரியது. வரும் டிசம்பர் 25ம் தேதி புத்தகம் வெளியாகிறது’ என்று பேசினார்.

மோகன்லால் வெளியிட் டுள்ள மற்றொரு பதிவில், `போதை பொருளுக்கு எதிரான போராட்டங்களில் ஒரு ஹீரோவாக நாம் இருப்போம். அதை யாரும் பயன்படுத்த மாட்டோம். அன்புக்குரியவர்களும் அதை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்போம். போதை பொருளுக்கு ‘நோ’ என்று சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். பலாப்பழத்தில் ஓவியம்: மோகன்லாலின் ரசிகரும், கேரளாவை சேர்ந்த பிரபல ஓவியருமான டாவின்சி சுரேஷ், மோகன்லாலின் பிறந்தநாள் பரிசாக அவரது உருவத்தை பலாப்பழத்தின் மூலம் வரைந்துள்ளார். 20 வகையான பலாப்பழங்களில் இருந்து பழம், காய், விதை, தோல், இலைகள் ஆகிய 65 வகையான பாகங்களை வைத்து இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். அபூர்வமாக விளையும் சிவப்பு நிற பலாப்பழத்தை பார்த்தபோது மோகன்லாலுடைய ஓவியத்தை வரையும் ஐடியா ஏற்பட்டதாக டாவின்சி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: