இந்நிலையில், ஆரம்பகாலத்தில் இருந்தே தனது தோற்றத்துக்காக மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த அனன்யா பாண்டே, இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதால், திடீரென்று அவரைப் பற்றிய விமர்சனங்கள் குறைந்துவிட்டது. உடல் தோற்றம் குறித்த விமர்சனம் பற்றி அனன்யா பாண்டே கூறுகையில், ‘எனது 18 வயதில் திரைப்பயணத்தை தொடங்கினேன். அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். எல்லோரும் இதுகுறித்து சொல்லி கிண்டல் செய்தனர். ‘உனக்கு இருப்பது கோழி கால்கள். நீ தீக்குச்சி போல் இருக்கிறாய்’ என்று கேலி செய்தனர். பிறகு நான் வளர, வளர இயற்கையாகவே என் உடலிலுள்ள தசைகள் கூடிவிட்டது. அதையும் சிலர், ‘இவளுக்கு எப்படி இவ்வளவு சதை வந்தது?’ என்று விமர்சித்தனர்.
நாம் எப்படி இருந்தாலும், எப்போதும் நம்மை விமர்சிக்க மக்களுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். குறிப்பாக, பெண்களை மட்டுமே இப்படி விமர்சிக்கின்றனர். இதுபோன்ற விஷயங்களை ஆண்கள் எதிர்கொள்வது இல்லை. இதுபோன்ற அழகு தரம் குறித்த நிலைகள் நிர்ணயம் செய்யப்படுவது ஏற்கும்படி இல்லை. இதை சமநிலை செய்ய வேண்டும். கேமராவுக்கு வெளியில் அழகு தரம் குறித்த நிலைகளை பின்பற்றாமல் இருப்பதன் மூலமாக அதை சமநிலைப்படுத்த விரும்புகிறேன்’ என்றார்.