இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புவதாக விஜய் தேவரகொண்டா உருகியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘நானும், ராஷ்மிகா மந்தனாவும் பொருத்தமான ஜோடி என்று எங்களது ரசிகர்கள் சொல்கின்றனர். அதையேதான் நானும் சொல்கிறேன். திரையில் எங்கள் லவ் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருப்பதால், தொடர்ந்து அவருடன் சேர்ந்து அதிக படங்களில் நடிக்க விரும்புகிறேன். இதுவரை குறைவான படங்களில்தான் நாங்கள் நடித்திருக்கிறோம். மீண்டும், மீண்டும் நாங்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்று நான் சொல்வதற்கு முக்கிய காரணம், ராஷ்மிகா மந்தனா ஒரு சிறந்த நடிகை என்பதுதான்’ என்றார்.
ராஷ்மிகாவுக்காக உருகும் விஜய் தேவரகொண்டா
