ராஷ்மிகாவுக்காக உருகும் விஜய் தேவரகொண்டா

கன்னடத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, பிறகு தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2018ல் ஹிட்டான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக ஜோடி சேர்ந்தனர். அவர்களது லவ் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்கவுட்டான நிலையில், ரசிகர்களும் இந்த ஜோடியை வரவேற்று மகிழ்ந்தனர். 2019ல் வெளியான ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்தனர். அப்போது முதல் அவர்களை பற்றி இணையதளங்களில் காதல் வதந்தி பரவி வரும் நிலையில், இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புவதாக விஜய் தேவரகொண்டா உருகியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘நானும், ராஷ்மிகா மந்தனாவும் பொருத்தமான ஜோடி என்று எங்களது ரசிகர்கள் சொல்கின்றனர். அதையேதான் நானும் சொல்கிறேன். திரையில் எங்கள் லவ் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருப்பதால், தொடர்ந்து அவருடன் சேர்ந்து அதிக படங்களில் நடிக்க விரும்புகிறேன். இதுவரை குறைவான படங்களில்தான் நாங்கள் நடித்திருக்கிறோம். மீண்டும், மீண்டும் நாங்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்று நான் சொல்வதற்கு முக்கிய காரணம், ராஷ்மிகா மந்தனா ஒரு சிறந்த நடிகை என்பதுதான்’ என்றார்.

Related Stories: