சமந்தா காதலுக்கு முட்டுக்கட்டை: இயக்குனரின் மனைவி ஆவேச பதிவு

மும்பை: சமந்தாவும் பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமொருவும் காதலிக்கிறார்கள். இவர்கள் நெருங்கி இருக்கும் புகைப்படம் ஒன்று நேற்று வைரலானது. இந்நிலையில் இவர்களின் காதல் உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வந்தனர். ராஜ் நிடிமொரு ஏற்கனவே திருமணம் ஆனவர். இவரது மனைவி சியாமளி டே. இவர் இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கிறார். ஆனால் அதில் பெரும்பாலும் நாய்களை பற்றிய பதிவுகளைத்தான் போடுவார். இவர் விலங்குகள் ஆர்வலராகவும் இருக்கிறார். இந்நிலையில் தனது கணவருடன் சமந்தா இருக்கும் புகைப்படம் வெளியானதும் சியாமளி டே இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, இன்று என்னை பற்றி நினைத்த, என்னை பார்த்த, என்னை பற்றி கேட்ட, என்னிடம் பேசிய, என்னை பற்றி பேசிய, என்னை பற்றி எழுதிய மற்றும் என்னை சந்தித்த அனைவருக்கும் ஆசிகளும், அன்பையும் அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவை அவர் கடும் கோபத்துடன் போட்டதாகவும் ராஜ் நிடிமொரு, சமந்தா நெருங்கி இருந்த புகைப்படம் வந்த பிறகே அவரை பலரும் தொடர்பு கொண்டதால் இப்படி சொன்னதாகவும் கூறப்படுகிறது. ரவி மோகன், கெனிஷா விவகாரத்தில் ஆர்த்தி சமீபத்தில் ஒரு பதிவை போட்டு பிரச்னை செய்தார்.

அதேபோல் சமந்தா காதல் விவகாரத்திலும் நடப்பதாக ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். அதே சமயம், ‘திருமணமான ஒருவரின் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் சம்மு’ என்றும் சோஷியல் மீடியாவில் சிலர் சமந்தாவுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

Related Stories: