திருச்சி, ஜூன் 14: திருச்சியில் மாயமான டெய்லரை போலீசார் தேடுகின்றனர். மயிலாடுதுறை திருச்சிற்றம்பலம் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (58). இவர் கடந்த 20 ஆண்டுகளாக மலேசியாவில் டைலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பிப்.22ம் தேதி நாகராஜன் மலேசியாவிலிருந்து விமானம் மூலம் திருச்சி ஏர்போர்ட் வந்தார்.
பின்னர் அவர் வீட்டிற்கு செல்லவில்லை என தெரிகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் காணவில்லை.இது குறித்து அவரது மனைவி நாயகி அளித்த புகாரின் பேரில், ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து மாயமான நாகராஜனை தேடி வருகின்றனர்.
The post திருச்சியில் தையல் தொழிலாளி மாயம் appeared first on Dinakaran.