திருச்சி, ஜூலை 22: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் குருப்-II மற்றும் IIA தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கவுள்ளதால், இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற மாவ ட்ட கலெக்டர் சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால், 645 காலிபணியிடங்களை நிரப்பும் வகையில் குருப்- II மற்றும் IIA தேர்வுக்கான அறிவிப்பாணை 15.7.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வை போட்டித் தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 28.7.2025 காலை 10 மணியளவில் துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு அனைத்து பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். எனவே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து போட்டித் தேர்வர்களும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு 0431-2413510, 94990 55901, 94990 55902 என்ற திருச்சி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு தெரி ந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
The post மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் குருப்-II, IIA தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வேலை நாடுநர்களுக்கு கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.
