டூவீலரை திருடிய தொழிலாளி கைது

ஜலகண்டாபுரம், ஜூலை 21: சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்த தோரமங்கலம் கிராமம், எம்ஜிஆர் நகரை சேர்ந்த சரஸ்வதி (24). இவர் கடந்த 13ம் தேதி ஜலகண்டாபுரம்-சின்னப்பம்பட்டி சாலை, தனியார் கிளினிக் எதிரே தனது டூவீலரை நிறுத்திவிட்டு மாத்திரை வாங்க கிளினிக்கிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்திச்சென்ற டூவீலரை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சரஸ்வதி ஜகண்டாபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சீரகாப்பாடி பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் விசாத்தி (38) என்பதும், இவர் தாரமங்கலம் அடுத்த கே.ஆர்.தோப்பூர் பகுதியில் தங்கியிருந்து மேன்சன் வேலைக்கு சென்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து விசாத்தியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து டூவீலரை பறிமுதல்

செய்தனர்.

The post டூவீலரை திருடிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: