ஓய்வு எஸ்எஸ்ஐ வீட்டில் நிறுத்திய டூவீலர் திருட்டு

நரசிங்கபுரம், ஜூலை 28: ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு அண்ணா தெரு பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (55). இவர் போலீசில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நேற்று முன்தினம், இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த டூவீலரை மர்ம நபர் திருடி சென்றனர். இதையடுத்து சவுந்தர்ராஜன் அவரது வீட்டில் உள்ள சிசிடிவி காட்சியை பார்த்த போது, வாலிபர் ஒருவர் வீட்டின் முன் இருந்த மின் விளக்குகளை அனைத்துவிட்டு, டூவீலரை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சவுந்தர்ராஜன் ெகாடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓய்வு எஸ்எஸ்ஐ வீட்டில் நிறுத்திய டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: