ஏற்காட்டில் கடும் குளிரால் மக்கள் அவதி

ஏற்காடு, ஜூலை 24: ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் 5அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. பனிமூட்டத்துடன் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. மழை மற்றும் கடும் குளிரால் ஏற்காடு உள்ளூர் மக்கள் மற்றும் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

ஏற்காட்டை சூழ்ந்த கடும் பனிமூட்டத்தாலும், அடிக்கடி பெய்து வரும் மழையாலும், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்காடு மலை கிராமங்களில் இருந்து ஏற்காடு நகர பகுதிக்கு படிக்க வரும் பள்ளி குழந்தைகள், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடும் குளிரால் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் கம்பளி ஆடைகள் அணிந்தபடி பள்ளிக்கு செல்கின்றனர். கடும் குளிரின் காரணமாக, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நேற்று குறைந்த அளவே இருந்தது.

The post ஏற்காட்டில் கடும் குளிரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: