அம்பேத்கரின் ‘சாதியை ஒழிக்கும் வழி’ என்ற நூலை 1936ம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து புத்தகம் போட்ட இயக்கம் திராவிட இயக்கம். அந்தளவுக்கு அம்பேத்கரை விதைத்தது திராவிட இயக்கம்தான் என்பதை மறந்துவிட முடியாது. நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து எங்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும்” என்று சிலர் கோரிக்கை வைத்த போது, “உங்களுக்குத் தான் பெரியார் ராமசாமி இருக்கிறாரே? அவரை வைத்து இயக்கம் நடத்துங்கள்” என்று சொன்னவர் அம்பேத்கர். 1969ம் ஆண்டு முதன்முதலில் முதலமைச்சரான கலைஞர்தான் ஆதிதிராவிடர் நலத்துறையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையையும் தனித்தனியே உருவாக்கினார்.
பட்டியலின மக்களுக்கு 18 விழுக்காடும் பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடும் வழங்கியவர் கலைஞர். அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.
நமது அரசியலமைப்புச்சட்டத்தை வகுத்துத்தந்த அம்பேத்கரை பின்பற்றி, சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம். சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணாமல், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க என்றும் உறுதி ஏற்போம்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.
The post திராவிட மாடல் அரசுதான் அம்பேத்கர் கனவை நிறைவேற்றுகிறது: லண்டனில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேச்சு appeared first on Dinakaran.