பாடாலூர், மே 23: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் வர்னேஷ்(8) தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அருகே உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக வீட்டில் உள்ளவர்களிடம் சென்று தகவல் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சிறுவனின் உடலை மீட்டனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.