கொடைக்கானலில் முதன்முறையாக ராட்சத காற்றாடி திருவிழா துவக்கம்: சுற்றுலாப்பயணிகள் ரசிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் முதன்முறையாக ராட்சத காற்றாடி திருவிழா துவங்கியது. இதனை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இந்த ஆண்டு கோடை சீசன் களைகட்டி வருகிறது. நாளை (மே 24) மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்கவுள்ளது. இதையொட்டி நட்சத்திர ஏரியில் லேசர் லைட் ஷோ, ரோஸ் கார்டன் பகுதியில் பழங்குடியினரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொடைக்கானலில் கூடுதல் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள பெப்பர் அருவி செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னவனூரில் அமைந்துள்ள ஆடு மற்றும் முயல் உரோமம் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள புல்வெளி பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதன்முறையாக ராட்சத காற்றாடி திருவிழா நேற்று துவங்கியது. இங்கு 20 முதல் 50 அடி வரையில் 40 விதமான காற்றாடிகள் பறக்க விடப்பட்டன.

இந்திய மூவர்ண தேசியக்கொடி, டிராகன், பஞ்சவர்ணக்கிளி, பொம்மைகள் உள்ளிட்ட உருவங்கள் கொண்ட ராட்சத காற்றாடிகளை சுற்றுலாப்பயணிகளை நேற்று கண்டு ரசித்தனர். இவ்விழா வரும் 25ம் தேதி வரை நடக்கும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காணலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானலில் முதன்முறையாக ராட்சத காற்றாடி திருவிழா துவக்கம்: சுற்றுலாப்பயணிகள் ரசிப்பு appeared first on Dinakaran.

Related Stories: