கொடநாடு கொலை செய்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட அந்த சார் யார்? சீமான் கேள்வி

தூத்துக்குடி: கொடநாடு கொலை செய்த சார் யார், தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்ட சார் யார்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி:  எங்களுடைய இறைவனுக்கு எங்கள் தாய் மொழியில் வழிபாடு இருக்காது, எங்கள் தாய் மொழியில் குடமுழுக்கு இருக்காது என்பது பெரிய கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எவ்வளவு பெரிய வெற்றி முழக்கம். பள்ளிக்கூடத்தில் இருக்காது, வழக்காடு மன்றத்தில் இருக்காது, வழிபாட்டு தலத்தில் இருக்காது.

ஒவ்வொரு முறையும் வழக்கு போட்டு அந்தந்த உரிமையை பெற வேண்டி இருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். கொடநாட்டில் கொலை, கொள்ளையை செய்த சார் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த சார் யார், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்த 2 சார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. 15 பேர் செத்தது உண்மை. சுட்டது உண்மை. அந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கொடுக்கப்பட்டு உள்ளது. என்றார்.

The post கொடநாடு கொலை செய்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட அந்த சார் யார்? சீமான் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: