பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு 4ம் தேதி தொடங்கியது 14ம் தேதி (நேற்று) நிறைவடைந்தது. சென்னையை பொறுத்தவரை மாநில கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா சாலை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டது. மாநில கல்லூரியில் 72 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன.
இதற்கிடையே, அரசு கல்லூரிகளில் சேருவதற்கான 2வது கட்ட விண்ணப்ப பதிவும் தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர் சேர்க்கை முடிவுற்று முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 30ம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
The post கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை பொதுப்பிரிவு முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு appeared first on Dinakaran.