வேப்பந்தட்டையில் அடிப்படை வசதிகள் கோரி மார்க்.கம்யூ.கட்சி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,மே.22: வெள்ளுவாடி, சோலை நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி மார்க்.கம்யூ.கட்சி சார்பாக வேப்பந்தட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று(21ம் தேதி) புதன்கிழமை மார்க். கம்யூ. கட்சி சார்பில் வெள்ளுவாடி, சோலை நகர் கிராமப் பகுதிகளில் அடிப் படை வசதிகளை நிறை வேற்றி தரக்கோரி பொது மக்களுடன் இணைந்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளுவாடி கிராமத்தில் தடையற்ற குடிநீர் வசதியை செய்துதர வேண்டும். காட்சிப் பொருளாக நிற்கும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 90மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் கழிவுநீர் வாய்க்கால் தரமானதாக அமைக்கப்பட வேண்டும். அரசு நடுநிலைப்பள்ளி முன்பு மழை நீர் தேங்காதபடிக்கு பள்ளத்தை சரி செய்து மேடு படுத்த வேண்டும்.

சோலை நகரில் அமைக்கப்பட்ட 500 மீட்டர் மெட்டல் சாலை, தார் சாலையாக மாற்றப்பட வேண்டும். சோலை நகரில் அனைத்து தெருக்களுக்கும் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து கொடுத்து, புதிய சிமெண்ட் சாலை போடப்பட வேண்டும். வெள்ளுவாடி கிராமத்தில் பொது சுகாதார வளாகம் அமைத்துத் தரப்பட வேண்டும். புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு வேப்பந்தட்டை வட்டக் குழு உறுப்பினர் அறிவழகன் தலைமை வகித்தார். வட்டக்குழு உறுப் பினர் சுப்பிரமணி, ராஜேந்திரன், பாஸ்கரன், பொன்னுமணி, பெரியசாமி, பரத், ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலை விரித்தனர்.

மார்க். கம்யூ.கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கே. இராஜேந்திரன், வேப்பந் தட்டை ஒன்றியச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வட்டக் குழு உறுப்பினர்கள் முருகேசன், சீனிவாசன், செல்வராஜ் உள்பட 45 பேர் கலந்து கொண்டனர். முடிவில் கிளைச் செயலாளர் வெங்கடேசன் நன்றி தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடி யாக குடிநீர் பிரச்சினைக ளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாக உறுதி அளித்தார்.

The post வேப்பந்தட்டையில் அடிப்படை வசதிகள் கோரி மார்க்.கம்யூ.கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: