சிறுமி பாலியல் பலாத்காரம் உறவினர் மீது போக்சோ வழக்கு

ஊத்தங்கரை, ஜூன் 14: ஊத்தங்கரை அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், உறவினர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆனந்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 முடித்துவிட்டு தனியார் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வருகிறார். இவர், கல்லாவி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் தெரிவித்துள்ளார். அதில், போச்சம்பள்ளி பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த மாமன் உறவு முறையான சூர்யா(26) என்பவர் ஆசை வார்த்தை கூறி, வீட்டில் தனியாக இருக்கும்போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த 8ம் தேதி வேலைக்கு சென்று கொண்டிருந்த போது அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை தொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொ) பத்மாவதி விசாரித்து சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post சிறுமி பாலியல் பலாத்காரம் உறவினர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: