திருவேங்கடம்,ஜூன் 14: திருவேங்கடம் அருகே திருமணமான இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குருவிகுளம் அருகேயுள்ள செட்டிகுளம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் முனியசாமி (35). இவரது மனைவி மகேஷ்வரி (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி காலை 10 மணிக்கு தனது ஊரில் இருந்து கழுகுமலை செல்லும் மினி பஸ்சில் மகேஷ்வரி ஏறி சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த முனியசாமி, உறவினர் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் குருவிகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
The post திருவேங்கடம் அருகே இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.