வாயில் தவளையுடன் பதுங்கிய பாம்பு பிடிபட்டது

திசையன்விளை, ஜூன் 14: திசையன்விளையில் வாயில் தவளையை கவ்வி பிடித்தவாறு பதுங்கிய பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். திசையன்விளை செல்வமருதூர் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் துளசிராம். இவரது வீட்டில் நேற்றுமுன்தினம் மாலை 3.30 மணியளவில் வாயில் தவளையை கவ்வி பிடித்தவாறு நல்ல பாம்பு ஒன்று வீட்டின் முற்றத்தில் நின்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் நல்ல பாம்பு அம்மிக்கல்லுக்கு இடையில் பதுங்கிக்கொண்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அம்மிக்கல்லுக்கு இடையில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

The post வாயில் தவளையுடன் பதுங்கிய பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Related Stories: