காதல் தம்பதியை கடத்திய வழக்கு யுவராஜ் உள்பட 3 பேர் விடுதலை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை முகாசிபிடாரியூரை சேர்ந்த பாலாஜி என்பவர், கடந்த 2013ம் ஆண்டு அவருடன் கல்லூரியில் படித்த ஹேமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு ஹேமலதாவின் தாய் மஞ்சுளா எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, காதல் தம்பதியினரை தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் மாநில தலைவர் யுவராஜ், சரவணன், அமுதரசு ஆகியோர் கடத்தி, ஹேமலதாவின் தாய் மஞ்சுளாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பெருந்துறை போலீசார், யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணையில், அனைத்து சாட்சியங்களும் பிறழ் சாட்சிகளாக மாறியது. இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணை முடித்து நீதிபதி சொர்ணகுமார் நேற்று யுவராஜ் உட்பட மூன்று பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டாலும், யுவராஜ் ஏற்கனவே கோகுல்ராஜ் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை பெற்று உள்ளதால், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post காதல் தம்பதியை கடத்திய வழக்கு யுவராஜ் உள்பட 3 பேர் விடுதலை appeared first on Dinakaran.

Related Stories: